படிக்கும் போது யார் (ஆசிரியர்) கண்ணிலும் படக் கூடாது என்று பயந்து மறைந்து படித்து முடித்தவுடன் பல்கலைக்கழகமோ பள்ளி பக்கமோ போகும் போது யாராவது (ஆசிரியர்) கண்ணில் பட மாட்டார்களா என எண்ணுபவர்களில் நானும் ஒருத்தி!
"மூடாத வாசல் அது விருந்தோம்பல் பேசும் எந்நாளும் இங்கே அட சந்தோசம் தான் கண்ணீரை கண்கள் என்றும் பார்த்ததில்லை ஏன் மண் மீது சொர்க்கம் இது தான்" Once upon a time என்று சொல்வார்களே என் வாழ்வும் ஒருகாலத்தில் இப்படிதான் வாழ்க்கையை வாழ்ந்தேன் - இவ் வரிகள் இல்லை வரிகளை கேட்கிறேன் - அவ் வாழ்க்கையில்லை
படி படிங்க என்ற சொல் பரீட்சை நேரத்தில் பார்க்கலாம் என்ற மனநிலையையும் பயம் வரும் நேரத்தில் செய்யப்படும் செயல் தேர்வு மதிப்பெண் கட்டுப்பாட்டில் இருப்பதால் மனமோ விடுமுறையை தேடும் ஞாபகம் தேசிய வியாதி என்பதால் முடிவு தெரிவிக்க அவசியமில்லை கவனி என்ற சொல் கற்றலினை விட கேட்பது நல்லது என்பதை படிக்கு பதில் பயன்படுத்திருந்தால் வகுப்'பை' சரியாக பயன்படுத்தி இருக்கலாம் பயம் பரீட்சை நேரத்தில் கவனி சொல் காதில் அதிகமாக கேட்டிருக்கும் வார்த்தை தான் எவ்வளவு வலிமையானது
நினைப்பதெல்லாம் நடப்பதுண்டு ஆனால் எதற்காக நினைத்தோமோ எப்போது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ அப்போது நிகழாமல் போகிறது அந்நிகழ்வை கடக்கையில் நிலையோ மௌனத்தின் நிழலாகி விடுகிறது
ஒவ்வொரு நாளிலும் இரு செயல்கள் நடைபெறுகின்றன ஒன்றின் விளைவு கண்ணீராகவும் - மற்ற ஒன்றின் விளைவு சிரிப்பாகவும் இடம்பெறுகின்றன கண்ணீரின் விளைவை துன்பம் என்றும் சிரிப்பின் விளைவை இன்பம் என்றும் பெயரிடப்படுகின்றன யாவையும் ஒரே நிகழ்வுகள் தான் ஆனால் இத்தனை பெயர்கள் நிர்ணயித்தது ஒரிரு மனம் தான் ஆம் யாரோ ஒரிரு மனிதர்களின் மனம் தான் தீர்மானித்து இருக்கின்றன இவை தான் இன்பம் துன்பம் என்று!