Posts

Showing posts from May, 2023

பிரச்சினை

 எல்லா பிரச்சினையும் வெங்காயம் போல தான் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இல்லாமல் போகும் ஆனால் உரிக்கும் நேரத்தில் நேர்ந்திடும் கண் எரிச்சல் தான் தங்கிவிடும் கவலையாக

மனிதர்கள்

 யாருக்கும் நிழல் ஆகாதீர்கள் ஒரு அடி எட்டியே நில்லுங்கள் நின்று பாருங்கள்  வாழ்க்கையில் சில மனிதர்களும் இரசிக்க கூடியவர்களே 

சிலரின் பிரிவு

 எங்கிருந்தோ வந்தார்கள் என்றேனும் ஒரு நாள் பிரிந்து விடுவார்கள் என்றோ ஒரு நாள் தான் ஆனாலும்  ஏன் தான் வந்தார்கள் இவ்விடத்தில் நூறு  பேர் இருப்பின் அதிலோன்றாக  இல்லாமல் இதயத்திற்கு நெருக்கமானது ஏனோ இத்தனை நாள் கடந்த நிகழ்ந்தவை கூறுகிறது என்றோ ஒரு  நாள் பிரிவென்று என்றாலும் மனம் கவலை கொள்கிறது இன்றிலிருந்தே... பழக்கம் வழக்கங்கள் ஆகும் என்ற நம்பிக்கை சென்று அவ்வழக்கம் நிகழ போகிறது  என்று இன்றே வலி மிகுகிறது...

தமிழும் விவசாயமும் 😍

 "தமிழ்" என்பது "உயிர்"ஐ  நிலைத்திருக்க செய்யும்  "விவசாயம்" என்பது  உயிரை கொண்டிருக்கும் "மெய்"ஐ  நிலைத்திருக்க செய்யும்

துரத்தும் நினைவுகள்

 வீட்டை விட்டு வெளி வருவதில்லை என அம்மா திட்டுகிறார் எங்களோடு இணைய மாட்டேன் என்கிறாள் என அக்காவும் அவர் பிள்ளைகளும் குற்றம் சாட்டுகின்றனர் அவர்களிடம் எப்படி சொல்வேன் நாளை விடுதி சென்ற பிறகு நேற்றைய இந்நேர நினைவுகள்  என்ன செய்தோம் என்ற நினைவுகள் என்னை துரத்துமே என்று! கூறினாலும் நீ சிறு பிள்ளையா? என்பார்கள் வயதிற்கும் மனதிற்கும் என்ன தொடர்பு  என கேட்டால் தத்துவம் பேசாதே! என்பார்கள் நம் வாழ்க்கை நமக்கு பிடித்த முறை அன்றி யாரோ விதித்த கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்து என்ன  அவர்கள் கண்டார்கள் ஒன்றுமில்லை? பின் ஏன் இப்படி வாழ சொல்கிறார்கள் அவர்களிடம் பதிலில்லை!

சுதந்திரம்

தனிமனித சுதந்திரம் என்பது  யாதெனில் தனக்குள் ஒரு நிகழ்வை  நினைத்து பார்த்து  வெளியில் சிரிக்கையில் சுற்றம் பைத்தியம் என விலகாமல் இருப்பதே!