துரத்தும் நினைவுகள்

 வீட்டை விட்டு வெளி வருவதில்லை என

அம்மா திட்டுகிறார்

எங்களோடு இணைய மாட்டேன் என்கிறாள் என

அக்காவும் அவர் பிள்ளைகளும் குற்றம்

சாட்டுகின்றனர்

அவர்களிடம் எப்படி சொல்வேன்

நாளை விடுதி சென்ற பிறகு

நேற்றைய இந்நேர நினைவுகள் 

என்ன செய்தோம்

என்ற நினைவுகள்

என்னை துரத்துமே என்று!

கூறினாலும்

நீ சிறு பிள்ளையா?

என்பார்கள்

வயதிற்கும் மனதிற்கும்

என்ன தொடர்பு 

என கேட்டால்

தத்துவம் பேசாதே!

என்பார்கள்

நம் வாழ்க்கை

நமக்கு பிடித்த முறை

அன்றி

யாரோ விதித்த

கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்து

என்ன 

அவர்கள் கண்டார்கள்

ஒன்றுமில்லை?

பின்

ஏன் இப்படி

வாழ சொல்கிறார்கள்

அவர்களிடம்

பதிலில்லை!

Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰