நா. முத்துக்குமார் 🤝

 கல்லூரி இறுதியாண்டு முழுவதும்

அழகாக்கியது 

நீங்கள் தானே.

படிக்க

அடம்பிடிக்கும் எங்களை

அம்மாவின்  மடியை

பிரிய மனமில்லா

குழந்தை போல

நூலகத்திலே

அமர செய்தது 

நீங்கள் தானே.


நீங்கள் அறிவீர்களா?

உங்களை

நாங்கள் பேசும் போதெல்லாம்

வானத்தையே காண்பேன்.

களையும் மேகத்தில்

களையாமல் நான்

காணும் உங்கள் 

 முகம்.


ஒவ்வொரு அசைவையும்

எங்கள் நட்பு கூட்டம்

வெளிப்படுத்துவது

உங்கள் வரிகள் 

மூலம் தான்.


அன்று நூலகத்தினுள்

நுழைந்து

நான்கு பொத்தகம் -"கை"யில்

கிடைத்து

படித்து - பிறர்

கையில் படா வண்ணம்

மறைத்து வைத்தது.


மூன்று ஆண்டுகள் 

பாராத பாதையில்

இறுதி எண் நாட்கள்

சென்று

"ஏதேதோ ஊர் தாண்டி

ஏராளம் பேர் தாண்டி போகின்றேன்"

என்று மனம் முனுமுனுத்தது.


வாழ்வை வசந்த

நாட்களாக்கிய

 பயண பேருந்திற்கு

"பிரிந்தாலும் மனதிலே இந்த

நொடியில்  என்றும் வாழ்வேன்"

என்ற வரிகள்

உரிதாகியது


இத்தனையும் காலம் செய்தது என்பதை

நீங்கள் அறிவீர்களா?


கல்லூரி நட்புகள் என்று

முதலில் தொடங்கி

மூன்றாம் ஆண்டில் - பட்டம் துறந்து

முத்துக்குமாரின் இரசிகைகள்

என வலம் வந்ததை

நீங்கள் அறிவீர்களா?


அறிந்து கொள்ள 

அருகில் உருவமாய்

இல்லையென்றாலும் 

என்றாலும்

"பாதை முடிந்த பிறகும்

இந்த உலகில் பயணம் முடிவதில்லையே"

என்று 

பாடல் வரியோடு 

பயணம் செய்யும்

கவி பாரியே

பிறந்தநாள் வாழ்த்துகள் 





Comments

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை

எம் தலைவன் 🥰