எம் தலைவன் 🥰

செயலால் 
மனதில் நிறைந்தவன்
வல்வெட்டித்துறையில் 
வாழ்க்கை தொடங்கிய கரிகாலன்
இவ்வளவு பெரிய பேரியக்கத்தை 
எழுப்பிய தலைவன் - இவராயென
எதிரியையும் எண்ண
செய்த புதிரன்
தன் இயக்கத்தில் அனைவர்
பற்றியும் அறிந்து
அவர்களே அறியா வண்ணம்
அவர்கள் குடும்பத்திடம்
நலம் செய்தி தரும் கள்வன்
வானம் என்ன 
அவன் அப்பன் வீட்டு சொத்தா? - என
கேட்குமிடத்தில் - என்றோ
பதில் கூறிவிட்டேன் எனும்
கம்பீரமுடையவன்
முப்படை அமைத்த தமிழன்- புற
முதுகு காட்டாத புறநானூற்று வீரன்
பல தமிழர்களை ஒன்றினைத்த தமிழானவன்
அனைத்திற்கும் மேல் அவன்
உயிரானவன்
தலைவன் ஒருவனே
தலைவன் ஒருவனே  அவன்
எம் பிரபாகரனே!

Comments

Post a Comment

Popular posts from this blog

நானும் ஒருத்தி

வார்த்தை