வந்தியத்தேவன்😎
வில்லிருந்து சென்ற அம்பு போல் ஆதித்த கரிகாலரிடமிருந்து சென்றீர் எதிரில் பல பாணங்கள் - சதியாய் சின்ன பழு பெரிய பழு நந்தினி இரவிதாசன் - என வந்தபோதும் கற்பனா சக்தியால் வெற்றிக் கொண்டு நோக்கம் தவறா குறியாய் சென்றீர் எந்நேரமும் உங்கள் அருகில் எனும் ஆசையை விட - எந்நேரமும் தங்களுடன் பயணிக்கும் பெண்ணாய் பிறக்க ஆசையாயிற்று.... லதா மண்டபத்தில் நந்தினியாய் பழையாற்றில் குந்தவையாய் பூந்தோட்டத்தில் அமுதனின் அன்னையாய் பாணலில் (கடலில்) படகை செலுத்தும் பூங்குழலியாய் பயணம் இடையில் பரிவோடு உதவி கேட்கும் வானதியாய் பல சூழ்ச்சி நடந்த கடம்பூர் மாளிகையில் கள்ளகபடமற்ற காதல் கொண்ட மணிமேகலையாய். வாழ்ந்த காலத்திலும் தற்போது வாழும் காலத்திலும் புகழை மட்டும் பெறும் வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனே